Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு!!!

J.Durai
புதன், 16 அக்டோபர் 2024 (14:02 IST)
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு  தினமும் விநியோகிக்கப்படுகிறது
 
கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீர் ஆக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
 
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்தது.
 
அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. அணையில் இருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது.
 
தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக - கேரளா அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து மதுரை வந்த இலங்கை ஆசிரியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்பு....

நில மோசடி சம்பந்தமாக அதிமுக எம்எல்ஏ மற்றும் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மீது ஒரே குடும்ப வாரிசுதாரர்கள் புகார்......

சிறுவாணி அணை 43.49 அடியாக உயரவு!!!

சென்னை கனமழையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - அரசே அளித்த விளக்கம்!

கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா?வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்

அடுத்த கட்டுரையில்
Show comments