தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்தல் இல்லை! – இந்தியர்களுக்கு சிங்கப்பூர் சலுகை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (10:47 IST)
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு நாடுகளில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

சமீபத்தில் இந்தியாவில் இந்த தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கே பொருந்தும். இந்த தளர்வுகள் எதிர்வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments