Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது

சத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:30 IST)
திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) நடக்கிறது.



கன்னிராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு முறை இக்கோவில் திருக்குளத்தில் இருந்து சத்தத்துடன் சங்கு வெளிவரும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். கோவில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் வகையில் 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முறையாக பதிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட பிறகே உணவினை வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்டறியும் வகையில் எட்டு காவல் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விழாவினையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments