Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற முடியாத பாவி நான் - ஷகிலா கண்ணீர் பேட்டி

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (16:46 IST)
தனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை என கவர்ச்சி நடிகை ஷகிலா வருத்தம் தெரிவித்துள்ளார்.


 

 
மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் ஷகிலா. இவருக்கு கேரளா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய காலமுண்டு. மலையாள சூப்பர் ஸ்டார்களான, மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படம் அதிக வசூலை கேரளாவில் வசூலித்தது. 
 
இதனால் கோபமடைந்த கேரள சினிமா உலகம், இவருக்கு எதிராக சதிவலை செய்து அவருக்கு கேரளாவிலிருந்து வெளியேற்றியது. அதன்பின் அவர் அவ்வப்போது தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமானது. பல துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். எதை செய்தாலும் அதில் முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். சமையல் வேலை செய்தாலும், அது மிகுந்த சுவையோடு இருக்க வேண்டும் என நினைப்பேன். 
 
நான் ஒரு போராளி. என் வாழ்வில் நடந்த எதையும் நன் நினைத்து துன்பப்படவில்லை. இதுவரை தென்னிந்திய மொழிகளில் 400 படங்கள் நடித்துள்ளேன். எனக்கென ஒரு அடையாளத்தை சினிமா துறையில் பெற்றுள்ளேன். 
 
எனக்கு இளம் வயதில் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என என் பெற்றோர்கள் மிகவும் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, அவர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது என் மனதில் நிரந்தர வலியாகவே இருக்கிறது. என் வாழ்வில் தற்போது அவர்கள் இல்லை. அதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல், தனிமையில் நான் வாடுகிறேன்” என ஷகிலா தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்