Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் அன்பில் மகேஷை தரக்குறைவாக விமர்சிப்பதா? பாஜக கேள்வி..!

Mahendran
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (10:26 IST)
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களே அமைச்சர் அன்பு மகேஷ் அவர்களை விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அமைச்சர் மகேஷ் அவர்களின் சமூகத்தள பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாகவும் கூறப்படும் நிலையில் ஒரு சிலர் அத்துமீறி அன்பில் மகேஷ் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் சமூக வலைதள பயன்பாட்டளர்களுக்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது சமூக வலைதளவில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
ஒரு மாநில அமைச்சரையே தரக்குறைவாக பேசும், எழுதும் சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
 
அமைச்சரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் திராவிடியன் ஸ்டாக்ஸ் உடனடியாக கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவுக்கோ அல்லது காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலுங்கு கானா ஆகிய திராவிட மாநிலங்களுக்கு புலம்பெயரலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments