Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (11:05 IST)
புதுவையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் போதிலும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
 
இந்நிலையில் புதுவையில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்த சேவியர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பள்ளி ஆசிரியையிடம் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். 
 
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் சேவியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்