Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம்

துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (12:23 IST)
சென்னையில் துணை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


 

 
சென்னை விருகம்பாக்கம், கம்பர் தெருவில் துணை நடிகர்களுக்கான ஏஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது. தினக்கூலி அடிப்படையில் துணை நடிகர்கள்  மற்றும் நடிகைகளை சினிமா படப்பிடிப்பிற்கு அந்த நிறுவனம் அனுப்பி வருகிறது.
 
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நிறுவனம் ஒரு புகார் அளித்தது. 
 
அந்த புகாரில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜோஸ்வா, ஏட்டுகளாக பணிபுரியும் குமரேசன், குமரன் மற்றும் மற்றொரு போலீஸ் அதிகாரி ராஜா ஆகியோர், அந்த நிறுவனத்தை சேர்ந்த துணை நடிகைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாமுல் கேட்பதாகவும் கூறியிருந்தனர். 
 
மேலும், அவர்களின் ஆசைக்கு இணங்காவிடில், விபச்சார வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் கூறியிருந்தனர். அந்த புகார் மனு கமிஷனர் உட்பட சில உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில், குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, ஏட்டு குமரேசன்,குமரன்,  ராஜா,  சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
 
இந்த விவகாரம் சென்னை போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்