Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கேநகர் தொகுதிக்கு தனித் தேர்தல் அறிக்கை: தினகரன் திட்டம்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (04:35 IST)
சென்னை ஆர்.கே.நகரில் சசிகலா ஆதரவு அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் மக்களுக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.



 


வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக சசிகலா ஆதரவு அணி வேட்பாளராக டிடிவி தினகரன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், தீபா பேரவை வேட்பாளராக தீபா ஆகியோர் இப்போதைக்கு களத்தில் உள்ளனர். கூடியவிரைவில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக வேட்பாளர் மற்றும் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும், அத்தொகுதியில் களமிறங்கவுள்ள அதிமுக சசிகலா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரனின் இந்த திட்டம் மக்களிடம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments