Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி உறவினர்கள் பண மோசடி : பணம் யாருக்கு சென்றது என விசாரிக்க உத்தரவு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (11:59 IST)
’வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் நேற்று புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த போலீசார், இதே போன்ற புகாரை 81 பேர் அளித்துள்ளதாகவும், அதனடிப்படையில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, ‘இந்த வழக்கில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும்; மேலும், வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டறிய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தீவிர விசாரணை நடத்துவதுடன், அதனை துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments