Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்: ஜாமீன் கிடைக்குமா?

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:32 IST)
பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 11 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு  விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பதினோராவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில்  ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments