Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு.. 24வது முறையாக நீட்டிப்பு.!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (13:54 IST)
செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 24 வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த உத்தரவை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச்11ஆம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments