Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நாளை பட்டியலிட உத்தரவு..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (15:26 IST)
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் வெளியான தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு விதமாக தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அவர்களுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நாளை பட்டியலிட மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த வழக்கின் விசாரணையை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லாவிட்டால் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். 
 
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியான சிவி கார்த்திகேயன் அவர்களது தீர்ப்பு முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments