Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (11:00 IST)
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக மனு தாக்கல் செய்து வருகிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுக்களும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளைய விசாரணையிலும் சென்னை ஹைகோர்ட் கேட்ட அதே கேள்வி கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சராக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்துள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு  இல்லை என வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments