Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:07 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய இலாகாக்கள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அதேபோல், சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்ட நிலையில், அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 
இதனை அடுத்து, தமிழக அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வைத் துறை முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல், பொன்முடி வசம் இருந்த வனத்துறை, காதித்துறை அமைச்சராக இருக்கும் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் வர வரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments