Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவு: திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவு: திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (22:41 IST)
நிலக்கோட்டை காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டு, முதலில் சோழவந்தான் தொகுதியிலிருந்தும், பிறகு நிலக்கோட்டை தொகுதியிலிருந்தும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் நல்வாழ்வுக்காக பெரிதும் பாடுபட்டவர் அக்கா பொன்னம்மாள்.
 
தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் விருதினை, திமுக ஆட்சியில் அவருக்கு வழங்கிப் பெருமைப்பட்டவன் நான். அவரது மறைவுக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் அந்தத் தொகுதி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அனைத்துக் கட்சித் தலைவர்களாலும், அருமையாக "அக்கா" என்று அழைக்கப்பட்ட, நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப் பட்டு குணம் அடையாத நிலையில் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும்
அதிர்ச்சியடைந்தேன்.
 
கட்சி மாச்சரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, என்பாலும், என் குடும்பத்தினரிடமும் தனி அன்பு கொண்டு, சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பதையே ஒரு கடமையாகக் கொண்டு வாழ்ந்த வந்த அந்த மூதாட்டி மறைந்து விட்டார் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil