Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரோ ஒட்டுன போஸ்டர், எனக்கு தெரியாது? விஸ்வாசி செங்கோட்டையன்!

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (09:17 IST)
அமைச்சர் செங்கோட்டையனிடம் சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து கேட்ட போது யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார்.
 
நேற்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்' என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் அதிமுக தலைமையகத்தில் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதனை தொடர்ந்து சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், 'அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்' என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். 
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் இறுதி மூச்சு இருக்கும் வரை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.
 
பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு. தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments