Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் தரத்தை உயர்த்தவே பொது தேர்வுகள்.. செங்கோட்டையன் விளக்கம்

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (13:48 IST)
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து திமுகவினரும் கல்வியாளர்களும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், “ மாணவர்களின் தரத்தை உயர்த்தவே பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆதலால் பொதுத் தேர்வை கண்டு மாணவர்களோ பெற்றோர்களோ அச்சப்பட வேண்டிய தேவை இல்லை” என கூறியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அதிக சுமைகளை கொடுக்கும் என பலர் விமர்சித்து வரும் நிலையில், செங்கோட்டையன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments