Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்து உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (16:20 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸின்‌ தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில்‌ ஒன்றாக அனைத்துக்‌ கல்லூரிகளுக்கும்‌ 17.03.2020 முதல்‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்‌ விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர்‌ தேர்வுகள்‌ இன்னும்‌ நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள்‌ தமிழ்நாட்டைத்‌ தவிர வேறு மாநிலங்களிலிருந்தும்‌ அயல்‌ நாட்டிலிருந்தும்‌ வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்‌. இதனை கருத்தில்‌ கொண்டு அனைத்து செமஸ்டர்‌ தேர்வுகளும்‌ மீண்டும்‌ கல்லூரிகள்‌ துவங்கும்‌ அடுத்த பருவம்‌ செமஸ்டரின்‌ துவக்கத்தில்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌. கல்லூரி மற்றும்‌ பல்கலைக்கழகங்கள்‌ மீண்டும்‌ திறப்பதற்கான தேதி அரசால்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments