மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்? செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

Siva
புதன், 22 மே 2024 (14:47 IST)
ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழக  காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் ஆவேசமாக பேசி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஒடிசாவில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு குறித்து அவமரியாதையாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் மோடியும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments