Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னதான் புலியா இருந்தாலும், எங்க முன்னே பூனைதான்! – செல்லூர் ராஜூ

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:26 IST)
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக அடிக்கடி வெளிநடப்பி செய்தது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. முதல் நாள் ஆளுனர் உரையின்போது குடியுரிமை சட்டம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இரண்டாம் நாளும் வெளிநடப்பு செய்த நிலையில் கடைசி நாளான நேற்று குடியுரிமை சட்டம் குறித்து திமுக கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆலோசித்து குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை இயற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் திமுக அளித்த தீர்மானம் பரிசீலனையில் இருப்பதாக தவிர்க்கப்பட்டதால் கடைசி நாளான நேற்றும் திமுக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்ததை குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ ”சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக தாங்கள் நினைத்தது எதையும் செய்யமுடியவில்லை. திமுக வெளியே புலியை போல திரிந்தாலும், பேரவையில் பூனையாகதான் இருந்தார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments