Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (20:11 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று அரசியல் குறித்த மேல் படிப்பு படிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் மேல்நாட்டில் நல்லபடியாக படித்து விட்டு வரட்டும் என்றும் ஆனால் அவர் நன்றாக படிப்பாரா என்பது எனக்கு தெரியாது என்றும் கூறினார்.

மேலும் மேல்நாட்டில் படிக்கச் செல்லும் அவர் மறைந்த தலைவர்களை பற்றி அவதூறாக பேசக்கூடாது என்பதை படித்துவிட்டு வரட்டும் என்று அல்லது மோடி , அமித்ஷா, நட்டா ஆகியோர்களாவது அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அண்ணாமலை மேல் படிப்புக்கு செல்வதை நான் வரவேற்கிறேன் என்றும் அவர் திரும்பி வந்து நாகரீகமான அரசியல் செய்யட்டும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

அடுத்த கட்டுரையில்
Show comments