Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாலு படம் ஓடிவிட்டால் நாளைய முதல்வரா? விஜய்யை கலாய்த்த செல்லூர் ராஜூ

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (20:23 IST)
இளையதளபதி விஜய் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒருசில விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் 'நாளைய முதல்வர் விஜய்' என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் கடுமையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றது.
 
இந்த நிலையில் விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'தற்போது ஒரு நடிகரின் நாலு படம் ஓடிவிட்டாலே அவரை முதல்வர் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். எல்லோருக்குமே தெரியும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவரது ரசிகர்கள் இவ்வாறு சொல்வது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், முதல்வராகலாம், எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது என்று செல்லூர் ராஜூ மேலும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த போஸ்டர்கள் குறித்து கருத்து கூறிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'ரஜினி முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 25 வருடங்களாக கூறி வருகின்றனர். ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகர்கள் முதல்வராக வேண்டும் என்பது பல வருடங்களாக நடந்து வருவது தான்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments