Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சேகர் ரெட்டி மனு

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (14:27 IST)
சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சினிவாசலுவும் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


 

 

முறைகேடான பணம் பரிவர்த்தனை மற்றும் கருப்பு பணம் பதுக்கல் என்ற பல்வேறு செயல்களில் ஈடுப்பட்ட சேகர் ரெட்டி நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது நண்பர் சினிவாசலுவும் கைது செய்யப்பட்டார்.
 
தொடர்ந்து 4 நாட்களாக சேகர் ரெட்டி வீட்டில் சோதனை செய்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏராளமான ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அவரிடம் சிக்கிய ஆவணங்களை வைத்து நேற்று தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
 
இதையடுத்து கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சினிவாசலு ஆகிய இருவரையும் ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு இருவரும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட உடனே அவர்கள் இருவரும் ஜாமின் மனு தாக்க செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments