Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரிகள்! – சேகர் பாபு அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் கட்ட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை பல்வேறு கோவில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோவில்களில் பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்களை மீட்டு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments