Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜ்ஜியம்... ஒருத்தனும் தேற மாட்டான்: விட்டு விளாசிய சீமான்!

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (17:09 IST)
தமிழகத்தில் அமைச்சர் பதவிக்கு தகுதித் தேர்வினை நடத்தினால் ஒருவரும் அமைச்சராகமாட்டார்கள் என சீமான் கூறியுள்ளார்.
 
பாஜகவின் 100 நாள் ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இணையவாசிகள் விடாமல் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, 
 
பாஜகவின் 100 நாட்கள் சாதனையை பற்றி கேள்விப்பட்டேன். நாட்டு மக்கள் சொந்தமாக கார் கூட வாங்க முடியாத நிலைக்கு பாஜக அரசின் ஆட்சி இருக்கிறது என மத்திய அரசை விமர்சித்தார். 
அதனை தொடர்ந்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்தும் பேசினார். வேளாண்மை வளர்ச்சியை விட்டுவிட்டு தொழில் வளர்ச்சியைக் குறித்துப் பேசி வருவது தமிழகத்தைப் பேராபத்திற்குக் கொண்டு போகும். சாதியை வாக்காகவே திராவிட காட்சிகள் பார்த்து வருகிறது. 
 
தமிழக முதல்வர் முதலீடு ஒப்பந்தங்களைக் குறித்து வெள்ளை அறிக்கையை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சியில் இது போன்று வெள்ளை அறிக்கை தரப்பட்டுள்ளதா? தமிழகத்தில் அமைச்சர் பதவிக்குத் தகுதித் தேர்வினை நடத்தினால் ஒருவரும் அமைச்சராகமாட்டார்கள் என தடாலடியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments