திருமாவளவனுடன் கைகோர்க்கும் சீமான்.. புதிய கூட்டணி உருவாகுமா?

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:12 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைகோர்க்க இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
அக்டோபர் 2ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் கலந்து கொள்ளும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் சீமான் கலந்து கொள்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் என்ற கேள்வி அரசியல் மத்தியில் எழுந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சில தொகுதிகளில் மறுவாக்குபதிவு உண்டா?.. தேர்தல் ஆணையம் பதில்!..

முதல்வர் கொடைக்கானல் போனதுக்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட் இருக்கு!.. இதான் மேட்டரா?..

அமெரிக்காவில் மரண தண்டனைக்கு மீண்டும் துப்பாக்கியால் சுடும் முறை அமல்

விரைவில் Redmi Note 17 Pro Max: 200MP கேமரா மற்றும் 10000mAh பேட்டரியுடன் மிரட்டலான வருகை!

100 அடி நீள ரூபாய் நோட்டு மாலை அணிந்த மணமகன்! போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments