அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு, தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த பேட்டியை அடுத்து, தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டியிருக்கிறது. சசிகலா தரப்பிற்கும், ஓ.பி.எஸ் தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் இல்லாத காரணத்தினால், அரசு எந்திரம் முடங்கி போயுள்ளது.
134 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் வசம் இருப்பதாக,சசிகலா தரப்பு கூறியது. தற்போது அதிலிருந்து 5 விலகி, ஓ.பி.எஸ் வசம் சென்றுள்ளனர். மேலும், சட்டசபையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என, ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பன்னீர்செல்வம் போன்று சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது. நமது ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே என்றார்.