Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானை காப்பி அடிக்கிறாரா ஜெகன் மோகன்??

Arun Prasath
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:32 IST)
தன்னுடைய திட்டங்களை தான் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டு வருகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வராக பதவியேற்றதிலிருந்து, பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்தவர்களில் ஐந்து பேரை துணை முதல்வராக நியமித்தது, ஆந்திரா போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்தது, தனியார் பள்ளி கட்டணங்களை குறைத்தது ஆகியவற்றை கூறலாம்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியை குறித்து, சீமான் தனது கட்சி நிகழ்வு ஒன்றில் பேசியபோது, ”தமிழ்நாட்டில் நான் கூறும் திட்டங்களெல்லாம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார், அவர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன். நான் சொன்னது போல் ஜெகன் மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.

பல மேடைகளில் சீமான், தனது திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அந்த திட்டங்கள் எல்லாம் தமிழர் மரபு சார்ந்த வரலாறுகளையும் நாகரீகங்களையும் தொழில்களையும் மீட்பது குறித்து இருக்கும்.  இந்நிலையில் தற்போது தனது திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments