Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன்: சீமான்

Mahendran
புதன், 7 பிப்ரவரி 2024 (13:58 IST)
நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன் என  சீமான் பேட்டியளித்துள்ளார்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் மாநகர்,  அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில், அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்காக சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துகிறார்கள். என்ஐஏ சோதனைக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம்
 
நாம் தமிழர் கட்சியை ஒரு போதும் உடைக்க முடியாது, நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சிய உடைக்கவிடமாட்டேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments