Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி கிடைத்தால் ஒரே நாளில் சுங்கச் சாவடிகளை இடிப்பேன்… சீமான் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:26 IST)
தன்னிடம் ஆட்சி கிடைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார் சீமான்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 

ஆம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்ந்துள்ளது. ஒரு முறை செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.55 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘என்னிடம் மட்டும் ஆட்சி கிடைத்தால் ஒரே நாள் இரவில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்து தள்ளிவிடுவேன்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments