Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்கவுண்டர் மாதிரி ராம்குமாரை மின்கவுண்டர் செய்துவிட்டர்கள்: சீறும் சீமான்!

என்கவுண்டர் மாதிரி ராம்குமாரை மின்கவுண்டர் செய்துவிட்டர்கள்: சீறும் சீமான்!

என்கவுண்டர் மாதிரி ராம்குமாரை மின்கவுண்டர் செய்துவிட்டர்கள்: சீறும் சீமான்!
, புதன், 21 செப்டம்பர் 2016 (17:57 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராம்குமாரின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பாதல் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
 
ராம்குமாரின் உடலை நாம் தமிழர் கட்சியின் சீமான் பார்வையிடுவதற்காக வாந்தார். ஆனால் காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன. ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. போலிசார் செய்யும் என்கவுண்டர் போல ராம்குமார் மிகவுண்டர் செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகங்கள் வருவதாக அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீட்டு பணத்திற்காக மூதாட்டி கொலை; உறவினர் கைது : கரூரில் பரபரப்பு