Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள், முக்கியமா மோடி.. சீமான் சொல்ல வருவது என்ன??

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (09:32 IST)
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் என எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை வைத்து எழுத சொல்ல வேண்டும் என சீமான் பேச்சு. 
 
நீட் தேர்வு விவகாரம் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின் பரபரப்பின் உச்சத்தில் சென்றது. அதோடு இந்த விவகாரம் இன்று சட்டசபையில் கடும் வாக்குவாதமாக மாறியது. 
 
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது, இந்த நாட்டை அளுகின்றவர்கள், சட்டங்கள் வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது, எந்த தேர்வு எழுதினார்கள் என்று கூட தெரியாது. 
 
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் என எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை வைத்து எழுத சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தாக் நாட்டில் மிகத்தகுதியான அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என நான் நினைக்கிறேன், அதிலும் மிக முக்கியமாக பிரதமர் மோடியை தேர்வு எழுத வைக்க வேண்டும், அதன்பிறகு கல்வி அமைச்சர் எழுத வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments