Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருநின்றவூரில் சீமான் போராட்டம்

திருநின்றவூரில் சீமான் போராட்டம்
, திங்கள், 28 டிசம்பர் 2015 (05:12 IST)
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

 
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் மழைநீரை அகற்றக்கோரி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு  சீமான் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். 
 

Share this Story:

Follow Webdunia tamil