Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் அண்ணா AK 74 எடுத்துட்டு வரவும்: சிக்கலிலும் நக்கல்!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (16:28 IST)
இலங்கையில் நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். 
 
அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
 
இந்நிலையில், திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா ராஜபக்சேவின் பதவியேற்பை கிண்டல் செய்து பதவிட்டுள்ளார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானையும் சீண்டியுள்ளார். 
 
அதாவது, ராஜபக்சேவின் புகைப்படத்தை வெளியிட்டு, அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என பதிவிட்டுள்ளார். 
 
இலங்கையில் நடந்து வரும் சிக்கல்களுக்கு இடையில் சீமானை வைத்து இந்த நக்கல் தேவையா எனவும், இதற்கு கிண்டலாக பல கருத்துக்களையும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments