Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்களுக்கும் ஒரு மாத சம்பளத்தை தரலாமே! – சீமான் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:11 IST)
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போலவே காவல்துறை, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகளை சுத்தம் செய்தல் போன்ற சுகாதார பணிகளில் ஈடுப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத வருமானம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ” உரிய பாதுகாப்பு அணிகலன்கள் இல்லாதபோதிலும் தொடர் மக்கள்பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர்,அங்கன்வாடி,அம்மா உணவக,நியாயவிலை கடை ஊழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.மற்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கியதைப்போல இவர்களுக்கும் ஒருமாத ஊதியம் வழங்கவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments