Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் 122 எம்.எல்.ஏக்கள். கொந்தளிப்பில் மக்கள்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (04:36 IST)
சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க கூடாது என பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும், போனிலும் கேட்டுக்கொண்டும், மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.




தங்கள் ஊருக்கு திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு 'சிறப்பு' வரவேற்பு கொடுக்க பொதுமக்கள்காத்திருப்பதாக உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும்ம் 122 எம்.எல்.ஏக்களின்  வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் திரும்பும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் மக்களின் மனம் மாறும் வரை சில எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் திரும்புவதை தவிர்த்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments