இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை: திமுக தொடர்ந்து முன்னிலை!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (07:51 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் நாளான இன்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக பல இடங்களில் முன்னணியில் இருந்தன.

இந்நிலையில் இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக 1800 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 244 இடங்களிலும், அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதுதவிர ஒன்றிய ஒடங்களில் அமமுக 66 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றியை ஈட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments