Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசுறதுக்கு டைம் தர மாட்றாங்க! – வெளிநடப்பு செய்த திமுக!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (11:33 IST)
குடியுரிமை சட்டம் குறித்து பேச சட்டசபையில் நேரம் ஒதுக்காததால் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக அரசின் 2020ம் ஆண்டு சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் தொடக்க உரை ஆளுனர் வாசித்தபோது திமுகவினர் குடியுரிமை பற்றி பேச அவகாசம் கேட்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று சட்டசபை கூடிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன் தான் மனு அளித்திருப்பதாகவும் கூறினார்.

ஸ்டாலின் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது என சபாநாயகர் கூறிய பிறகும், பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் தேச ஒருமைபாட்டுக்கு உகந்தது அல்ல. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் வலியுறுத்தலை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments