தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன்:
“தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால், வட கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென் கடலோர மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்யும்” என்று கூறினார்.