Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:02 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே/ கொரோனா வைரஸ் பாதிப்பு எப்பொழுது குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை கேட்டது. அதன்படி ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்துக் கேட்டிருந்தது
 
இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் படிப்பை விட மாணவர்களின் உடல் நலமே முக்கியம் என்றும் கூறியிருந்தனர். இதனை மனிதவளத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாகவும் எனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கல்வி ஆண்டின் மிகவும் தாமதமாக தொடங்கலாம் என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments