Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியை மாணவர்களை வைத்து தூய்மை படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (18:19 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதில் இருந்து உதிரும் இலைகளால் குப்பை  உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது.  அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும்.  தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தைச்  சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களை  இந்தச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.  இதற்கு உள்ளூர் மக்கள் அல்லதிஉ, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிபவர்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளியில் அறிவிப்புப் பலகையில்  நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செல்வியர்களின் தொலைபேசி எண்களையும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments