தமிழ்நாட்டில் கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை?

Siva
வியாழன், 16 அக்டோபர் 2025 (08:18 IST)
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் இன்று பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
இதுவரை மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், சென்னையில் இன்று காலை வெயில் அடிப்பதால் விடுமுறைக்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments