Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைநாள்: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (16:18 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும்வரும் சனிக்கிழமை செயல்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரிலிருந்து திரும்புவதற்கு வசதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் அன்று விடுமுறை விடப்பட்டது 
 
இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் கடந்த சில நாட்களாக மழை காரணமாக விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் அதற்கு ஈடு செய்ய மேலும் சில சனிக்கிழமைகள் பள்ளி செயல்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments