Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பல்

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பல்
, புதன், 15 ஏப்ரல் 2015 (15:32 IST)
தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே 14 வயது மாணவி ஒருவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும் தர்மபுரி மாவட்டம் கெரகோட அள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்ற 19 வயது வாலிபரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் மாணவி கடந்த 8 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்புகள் முடிந்த பின்னர் ஊருக்கு திரும்பினார். மாணவி ஊருக்கு நடந்து வரும் வழியில் மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய 2 வாலிபர்கள் மாணவியை வழிமறித்தனர்.
 
அவர்கள் அந்த மாணவியை மிரட்டி அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டின் மேல்புறத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 2 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்து அந்த காட்சியை தங்களுடைய, செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, அந்த வீடியோவில் பதிவு செய்துள்ள காட்சியை காட்டி, நாங்கள் இருவரும் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் அதனை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மாணவி பயந்துபோனார்.
 
இதை தொடர்ந்து மறுநாளான 9 ஆம் தேதி அந்த 2 வாலிபர்களும் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவியை மீண்டும் செல்போனில் எடுக்கப்பட்ட அந்த காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதும் அந்த வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
 
பின்னர் அந்த பாலியல் பலாத்கார வீடியோ காட்சியை 2 வாலிபர்களும் தங்களுடைய 2 நண்பர்களுக்கும் காட்டியுள்ளனர். அதன் பிறகு, ஏற்கனவே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களும், சந்தோஷ், மற்றும் மற்றொரு 17 வயது வாலிபரும் கெரகோட அள்ளி பகுதியை சேர்ந்த மாணவியின் நண்பர் ராகுல் , போஸ் என்கிற சந்திரபோஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து மீண்டும் அந்த மாணவியை வீடியோ காட்டி மிரட்டி ஊரின் அருகே உள்ள காட்டுபகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
அப்போதும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி பலவீனம் அடைந்துள்ளார். இதையடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த மாணவி தகவல் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்த தகவல் தகவல் மாவட்ட ஆட்சியருக்குக் கொடுக்கப்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
 
இதையடுத்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கெரகோட அள்ளி பகுதியைச் சேர்ந்த ராகுல், ஆர்.கோவிந்தநாதம்பட்டி பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மற்றும் வாலிபர் சந்தோஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
ஆர்.கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil