Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழை நீடிப்பதால் மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மழை நீடிப்பதால் மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:31 IST)
தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சில மாவட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஏற்கனவே பெய்த, பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன்,  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது.  ஆனால், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 
 
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிறைய இடங்களில் மழை பெய்யும்” என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, நாளையும் சென்னை,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil