Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்தாம் வகுப்பு மாணவனை கூட்டிக்கொண்டு ஓடிப்போன டீச்சர்

பத்தாம் வகுப்பு மாணவனை கூட்டிக்கொண்டு ஓடிப்போன டீச்சர்
, சனி, 11 ஏப்ரல் 2015 (13:14 IST)
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதிய கையோடு மாணவனை ஆசிரியை ஒருவர் கூட்டுக்கொண்டு ஓடிப்போய்விட்டார்.
 
கடையநல்லூரில் உள்ள பள்ளியில் சுந்தர் (16) என்ற மாணவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 

 
இந்நிலையில் நேற்று கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு முடிந்துள்ளது. தேர்வு எழுதி முடிந்த கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். ஏற்கனவே காதல் விஷயம் தெரிந்த மாணனின் பெற்றோர்கள் ஆசிரியைக் கண்டித்துள்ளனர்.
 
தற்போது இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.
 
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர். பள்ளி ஆசிரியை மாணவனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil