Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:13 IST)
விருதுநகர் அருகே பிளஸ்2 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.



 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு அரசு உயர்நிலை பள்ளியில் பிளஸ்2 படித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாணவியிடம் அந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் முத்துராஜ் என்பவர் பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
இந்தநிலையில் அந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது பள்ளி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது பள்ளி ஆசிரியர் முத்துராஜ் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் என்னுடன் படிக்கும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த புகார் குறித்து அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்புமதி ஆசிரியர் முத்துராஜை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil