Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் பரபரப்பு: ரெயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன் படுகாயம்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (13:45 IST)
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் பிள்ஸ்-2 படித்து வருகிறார். உறவினர் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ரெயில் மூலம் நெல்லைக்கு வந்து சேர்ந்தார்.
 
ரெயில் நிலையத்தில், யுவராஜ் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகள் மீது செல்ஃபி எடுக்க மேலே ஏறியுள்ளார். அப்போது மின்சார கம்பியில் அவரது கை உரசியுள்ளது. இதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டார். 
 
இதைக்கண்டவர்கள் யுவராஜை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது யுவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments