Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
, சனி, 4 ஜூலை 2015 (02:55 IST)
திருவண்ணாமலை அருகே, பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோசலின் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(23) என்பவருடன், ரோசலினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட வெங்கடேசன், ரோசலினை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனால், அதிர்ச்சி அடைந்த ரோசலின்  தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு  வெங்கடேசன் மறுத்துள்ளார்.
 
இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவி ரோசலின் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் வெங்கடேசனை கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil