Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது
, ஞாயிறு, 31 மே 2015 (16:48 IST)
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக  பிரமுகரின் மகன் பிரதீப்குமார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
 
நாகர்கோவில், அருகே இரணியல் அருகே உள்ளது பறையன்விளை. இங்கு, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக  எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜ்குமார் வசித்து வருகின்றார். இவது மகன் பிரதீப்குமார் (38).
 
இவரது பக்கத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் அம்மு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 1 படித்து வந்தார். வழக்கம் போல் அம்முவின் தந்தயைும், தாயும் வேலைக்காக வெளியே சென்றனர். அப்போது அவரது வீட்டில் மாணவி அம்மு மட்டும் தனியாக இருந்தார்.
 
இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட பிரதீப்குமார், அம்முவின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனையடுத்து, வலியில் துடித்த அந்த அம்மு, மாலையில் வேலைக்கு சென்று திரும்பிய தனது தாயாரிடம் பிரதீப்குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். 
 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்முவின் தாயார், உடனே இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர்  உமா தீவிர விசாரணை நடத்தியதில், மாணவியை பிரதீப்குமார் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் உள்பட 4 பிரிவுகளில் பிரதீப்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
 
மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி அம்முவை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பிவைத்தனர்.  
 
பள்ளி மாணவியை அதிமுக பிரமுகர் மகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil